கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பல நாடுகளில்
நடந்து வரும் ஊரடங்கினால் வீடியோ சாட்டிங் பயன்பாடு செயலியான ஜூம்
பயன்பாட்டின் பதிவிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம்
ஊழியர்கள் பலர் வீட்டில இருந்தபடி தங்கள் மேலதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங்
மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடுகின்றனர்.
இந்நிலையில் ஜூம் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள்
ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக நேற்று தகவல்வெளியானது. இதைத்தொடர்ந்து
மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த
வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் இந்நிலையில், ஜூம் பயன்பாட்டால் சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொன்னால் பலரின் இணையப் பாதுகாப்பு பறிபோய்விட்டது மற்றும் உங்கள் தனியுரிமை தகவல்கள் இந்த பயன்பாட்டின் மூலம் ஓட்டை போட்டு வெளியுலகிற்கு அம்பலமாகிவிட்டது.
ஜூம்செயலியை பயன்படுத்த தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம்
தடை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
சிங்கப்பூரில், ஆசிரியர்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை
விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் ஜூம் செயலியை
பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் இந்நிலையில், ஜூம் பயன்பாட்டால் சைபர் பாதுகாப்பின்மை அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொன்னால் பலரின் இணையப் பாதுகாப்பு பறிபோய்விட்டது மற்றும் உங்கள் தனியுரிமை தகவல்கள் இந்த பயன்பாட்டின் மூலம் ஓட்டை போட்டு வெளியுலகிற்கு அம்பலமாகிவிட்டது.
சில நாட்களுக்கு முன்பு வந்த ஒரு அறிக்கை, ஜூம் பயன்பாட்டை ஹேக்கிங் செய்வதிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஹேக்கர்கள் இப்போது
இணையத்தில் விற்பனை செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. இணையத்தின் இருண்ட பகுதியான டார்க் வெப் பகுதியில் பல
பயனர்களின் தகவல்கள் வெளிப்படையாக விற்பனைக்கு வந்துள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜூம் பயன்பாட்டின் மூலம் அனைத்து விதமான தகவல்களும் சுரண்டப்பட்டுள்ளன, குறிப்பாகப் பயனர்களின் வெப்கேமில் துவங்கி,
மைக்ரோஃபோன், பயனரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் உட்படக் கருவியுடன் இடையில்
உள்ள அனைத்து ஒருங்கிணைந்த தரவுகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய மதர்போர்டு நேர்காணலின் போது இந்த அதிர்ச்சி
தகவல் ஒரு ஹேக்கரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
டார்க் வெப் சந்தையில் இந்த பயனர்களின் தகவல்கள் விற்கப்படுகின்றன
என்பதை அவர் சுட்டிக்காட்டினார், அதேபோல், ஹேக்கர்
வர்த்தகத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த
நேர்காணலின் தகவல் படி, அந்த ஹேக்கர் டார்க் வெப் சந்தையில் தாமே சில zoom
பயனர்களின் தகவல்களை வாங்கியுள்ளதாகவும் உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார்.
ஜூம் அண்மையில் ஜூம்பாம்பிங் செய்தது என்றும் தெரிகிறது, சீரற்ற
பயனர்கள் ஒரு வீடியோ கான்பிரென்ஸ் மூலம் சேர்ந்தது பயனர்களின் அனுமதியின்றி
பேஸ்புக்கிற்கு அதன் பயனர் தரவை விற்றதோடு, விண்டோஸ் மற்றும் macOS
பயனர்களின் தரவு மற்றும் கடவுச்சொல்லை ஹேக்கர்கள் திருட உதவும் வகையில் ஒரு
மிகப் பெரிய பிணைக்கப்படாத பிழை பக்-ஐ (Error-Bug) கொண்டிருந்தது என்பதும் இப்பொழுது
கண்டறியப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமை தகவல் திருட்டு மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக இந்த ஜூம்
பயன்பாட்டு செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கூகிள்
நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. அதேபோல், இந்த ஜூம் பயன்பாட்டைக் கூகிள்
நிறுவனம் தனது
ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி, இந்த
பயன்பாட்டை தனது ஊழியர்கள் பயன்படுத்த தடையையும்
விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.